districts

img

செஞ்சட்டை பேரணி- சிவந்தது மதுரை

மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற செஞ்சட்டை பேரணியை சு.வெங்கடேசன் எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற செஞ்சட்டை பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன்,  திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்புலிகளின் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், கோவை ராமகிருஷ்ணன், உள்ளிட்ட தலைவர்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பொதுத்துறைகளை விற்க்கூடாது, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் முழகத்தை மோடி  கைவிட வேண்டும். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை கார்பரேட்மயமாக்க கூடாது என்று பேரணியில் கலந்து கொண்டோர் முழக்கங்களை எழுப்பினர்.