சென்னை, ஜூலை 10- சென்னையில் போக்குவரத்து விதிமீறல் களில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கடந்த 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அவர்க ளுக்கு நினைவூட்ட போக்குவரத்து காவல் தறை சார்பில் அழைப்பு மையங்கள் திறக்கப் பட்டன. மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலை பேசி வாயிலாக நிலுவையில் இருந்த போக்கு வரத்து விதிமீறல் வழக்குகள் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கு கள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப் படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த முயற்சியின் காரணமாக கடந்த 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூ.11 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்தி 25 அபராத தொகையாக வசூ லிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.