districts

img

சமத்துவபுரங்களை புனரமைத்து பயனாளிகளுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும்

சிவகங்கை, மே 18- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியில் பெரி யார் சமத்துவபுரம் கடந்த திமுக ஆட்சியின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தேர்தல் வந்ததைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்  நிலையில் மே 18 அன்று கோட்டைவேங்கை பட்டி பெரியார் சமத்துவபுரத்தை ஊரக  உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்  பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமத்து வபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை  பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குவ தற்குக் கூட மனம் இல்லாமல் அதிமுக ஆட்சி யாளர்கள் இந்த திட்டத்தை முடக்கி வைத்தி ருந்தார்கள். மு.க. ஸ்டாலின் முதலமைச்ச ராக பொறுப்பேற்ற உடன் பெரியார் சமத்து வபுரத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்  என்று விரும்பினார். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டில் ஏறத்தாழ 180 சமத்து வபுரங்களை மறு சீரமைக்க பெரும் தொகை யையும் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர்,  திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்க ளில் 5 சமத்துவபுரங்கள் புனரமைத்து மீண்  டும் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்த ரவிட்டுள்ளார். விரைவில் பணிகள் முடிக் கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.