மும்பை, செப்.30- நாட்டின் பணவீக்கம் கவலை யளிக்கும் வகையிலேயே உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதனடிப்படையில், நடப்பாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பும், 7 சதவிகிதமாக குறைக்கப்பட்டு உள்ள தாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் (RBI Monetary Policy Committee Meeting) கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 28) அன்று துவங்கியது. இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, ரிசர்வ் வங்கி யின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், வெள்ளிக்கிழமையன்று செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில், டால ருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்துவது, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர் பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டன. அதனடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சர்வதேச அளவில் பணக் கொள்கை கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் உலகப் பொருளாதாரம் புதிய புயலின் கண்ணில் சிக்கி யுள்ளது. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளா தாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வில்லை. உலகளாவிய மத்திய வங்கிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தின. இந்தப் பின்னணியில், இந்தியப் பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை கண்டது. கொரோனா தொற்றுநோய், ரஷ்யா-உக்ரைன் மோதலின் அதிர்ச்சிகளை இந்தி யாவும் தாங்கியுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்புத் திறன் கொண்ட தாக இருக்கிறது. எனினும், உலக அள விலான அரசியல் சூழல், நிதிச் சந்தை யில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பணவீக்கம் 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனியார் நுகர்வும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதலீட்டு தேவை அதி கரித்துள்ளது. விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது. எனினும், நடப்பாண்டின் இரண்டாம் அரையா ண்டில் 6 சதவிகிதம் என்ற அளவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பு நிதியாண்டில் சில்லரைப் பண வீக்கம் 6.7 சதவிகிதமாக இருக்க லாம். சர்வதேச சந்தையில் அண்மை யில் பொருட்களின் விலை குறைந் தது. இதுதொடர்ந்து நீடித்தால் வரும் மாதங்களில் விலைவாசி கட்டுக்குள் இருக்கும். பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில், நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியா 7 சத விகித வளர்ச்சியை மட்டுமே கொண்டி ருக்கும். கடைசியாக நடந்த நாணயக் கொள்கைக் கூட்டத்தில் நடப்பு நிதி யாண்டுக்கான இந்தியப் பொருளா தார வளர்ச்சி மதிப்பீடு 7.2 சதவிகிதமாக வைக்கப்பட்டிருந்தது. அதி லிருந்து தற்போது 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.9 சதவிகித மாக்க முடிவு செய்துள்ளது. அதேபோல எஸ்டிஎப் (SDF) விகிதம் 5.65 சதவிகிதமாகவும், எம்எஸ்எப் (MSF) விகிதம் 6.15 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கம் இன்னும் அனைத்துத் துறைகளு க்கும் கவலை அளிக்கும் விஷய மாகவே உள்ளது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.