districts

img

தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச்.4- அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீத அகவிலைப்படி உயர்வு கோரி தேனியில் சிஐடியு ரேஷன் கடை ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயல் தலைவர் டி. பிச்சைமணி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.கருப்பசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர்  எம்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றி னார். மாவட்ட நிர்வாகிகள் சிவம், வீரேஸ்வரன், காளிச்சாமி, சுகுணா, ஜெயந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செய லாளர் செந்தில் காமு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் பொருட் கள் வாங்குவதற்கு கைரேகை முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும், தரமற்ற பொருட்களுக்கு விற்பனையாளரை பொறுப்பாக்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி வரன்முறைப்படுத்த வேண்டும். தனித்துறை உருவாக்கி ஒருதுறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.