இராஜபாளையம், ஏப்.8- கூட்டுறவு ரேசன் கடை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்க ளுக்கு வழங்கியது போல் அகவிலைப்படி 31 சதவீதம், ஊதிய உயர்வு வழங்கிடக்கோரியும், பொது விநியோகத் திட்டத்தை கொண்டு வரக் கோரியும் இராஜபாளையம் பண்டகசாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் உயிர் காத்தான் விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் ஆர்.முனி யாண்டி, சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ஜி.கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.