சென்னை, மே 27- ரேசன் கடைகளில் அரிசி,பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை விரைவில் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள்” என்றார். பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைக ளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாகவும் கூறிய அவர், மேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரி வித்தார். ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுக ளில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.