districts

img

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று சாய்வு தளம் அமைப்பு

சின்னாளப்பட்டி, செப்.19-  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி  ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் சாய்வு தளப் பாதை இல்லாததால் மாற்றுத்திற னாளிகளும், முதியோரும் ஏற சிரமப்பட்டனர். எனவே, அலுவலகத்திற்கு சாய்வு தளப் பாதை அமைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதை ஏற்று விராலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சாய்வு  தள பாதை அமைத்துக் கொடுத்தனர். மாற்றுத் திறனாளி களும், முதியோர்களும் விராலிப்பட்டி ஊராட்சி மன்றத்தி னருக்கு நன்றி தெரிவித்தனர்.