districts

img

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

இராமேஸ்வரம், ஜூலை 25- இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீன வர்கள் மற்றும் படகை விடுவிக்க ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை  எடுக்கக் கோரி மீனவர்கள் மேற்  கொண்டு வரும் காலவரையற்ற  வேலைநிறுத்த போராட்டம்தொடர் கறது. இதனால் ரூ.10 கோடி மதிப்பி லான மீன் ஏற்றுமதி வர்த்தம் பாதி கப்பட்டுள்ளதாக மீனவ சங்கப் பொதுச்  செயலாளர் என்.ஜே.போஸ் திங்கட் கிழமை தெரிவித்தார். வேலை நிறுத்தம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் 800- க்கும் மேற்பட்ட விசைப்  படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஐந்தாயி ரத்திற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ஒன்றிய-மாநில அரசுகள் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் பாரம்பிய  இடத்தில் மீன்பிடிக்க உரிய அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மீனவர்கள் கூறினர்.