மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவர் முத்துப்பாண்டி, கிளைச் செயலாளர் பிரதாப், மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் பூங்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.