districts

img

விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

தேனி, ஜூன் 28- திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். நூறு நாள்  வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கூலியை மாநில அரசு பங்களிப்போடு ரூ. 350 ஆக  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்  ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில  இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை, கம்பம், சின்னமனூர், போடி, உத்தமபாளையம் ஆகிய  இடங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் பேசினார் .கடமலை-மயிலை ஒன்  றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சங்க மாநிலச்செயலாளர் ஏ.வி. அண்ணமாலை பேசினார். 

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அருப்புக் கோட்டை ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ். பூங்கோதை தலை மையேற்றார்.  வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி, சிவகாசி, காரியாபட்டி, இராஜ பாளையம்,திருவில்லிபுத்தூர், வத்திரா யிருப்பு, நக்கலக்கோட்டையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சாத்தூரில் மாவட்ட செய லாளர் எம்.சுந்தரபாண்டியன் கண்டன உரை யாற்றினார். சிவகாசி ஒன்றியம், சேர் வைக்காரன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.  இராஜபாளையத்தில் மாநில தலைவர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி பேசினார். 

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை,ஓட்டன்சத்திரம் உட்பட 8 மையங்களில் விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பழனியில் மாவட்டச்செயலாளர் கே.அருள்செல்வன் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவ கங்கையில் மாவட்ட தலைவர் பொன்னுசாமி பேசினார். 

மதுரை 

மதுரை அலங்காநல்லூரில மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன் பேசினார். டி.கல்லுப்பட்டியில் மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன் பேசினார்.