districts

img

மழைநீர் வடிகால் ஓடை சீரமைப்பு மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு

நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் மாநகராட்சி இடலாக்குடி நாயுடு மருத்துவமனை அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை சீரமைப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறி யாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன், கவுன்  சிலர் ரிஸ்வானா பாத்திமா, நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அசோக், மண்டலத் தலைவர்கள் கோகில வாணி, ஜவகர், மாநகராட்சி பணிகள் குழு  தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் உட னிருந்தனர்.