districts

img

சிராவயலில் சீறிப் பாய்ந்த காளைகள்....

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 17 அன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மாடுபிடி வீரர்கள்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.