சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 17 அன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.