districts

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கண்வலிக் கிழங்கு விதை கொள்முதல்

திண்டுக்கல், செப்.14- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் கண் வலி கிழங்கு விதை விளைபொருள் கொள்  முதல் மற்றும் விற்பனை மேற்கொள்ளப் படவுள்ளது வேளாண் விளைபொருள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் 1987-ன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஆகிய 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளில்  கண் வலிக் கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது.   எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கண் வலி கிழங்கு விதை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் அறிக்கையிடப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்று கண் வலி கிழங்கு விதை விளைபொரு ளினை கொள்முதல் செய்திடவேண்டும். விவசாயிகள், கண் வலி கிழங்கு விதை விளைபொருளினை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்பட்டு வரும் தேசிய மின்னணு வேளாண் திட்டத்தின் மூலம் விற்பனை செய்திட ஏதுவாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.  திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுதொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி  கூறும்போது, ‘‘கண்வலிக் கிழங்கு  விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக திண்  டுக்கல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கண்  வலிக் கிழங்கு நடவுசெய்து அறுவடை செய்ய ஏக்கருக்கு ரூ.4 லட்சம் செலவு ஆகி றது. 300 கிலோ ஒரு ஏக்கரில் வரை சாகுபடி  கிடைக்கும். மழை மற்றும் நோய் தாக்கு தல் போன்ற இடர்பாடுகளின் போது ஏக்க ருக்கு சராசரி 100 கிலோதான் கிடைக்கும்.  எனவே கண்வலிக் கிழங்கு விவசாயி களின் துயரம் போக்குவதற்காக திண்டுக் கல் ஆட்சியரின் இந்த அறிவிப்பு வர வேற்கக் கூடியதாகும். ஆனால் நமது  கொள்முதல் நிலையங்களில் கட்டுப்படி யான விலையை நிர்ணயித்து விதைகளை கொள்முதல் செய்யவேண்டும். கிலோ  ரூ.3500 கிடைத்தால்தான் கட்டுப்படியா கும்’’ என்றார்.