நாகர்கோவில், டிச.9- கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டி யலினை வியாழனன்று (டிச.9) மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை யில் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தால் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நகராட்சி கள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் நகர்புற அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் அண்மையில் வெளியிடப் பட்ட சட்டமன்றத் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய் யப்பட்டு, சம்பந்தப்பட்ட நகர்புற வாக்காளர் பதிவு அலுவலர்கள் / ஆணையர் / செயல் அலுவலர்களால் 9.12.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி பிரிவில் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற வுள்ள பகுதிகளின் மொத்த வாக்காளர் விவ ரம்:
நகராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 28461, பெண்கள் 29381, இதரர் 6, மொத்தம் 57848. வாக்குச்சாவடிகள் 77, பேரூராட்சி களில் ஆண் வாக்காளர்கள் 335832, பெண் கள் 335812, இதர் 43, மொத்தம் 671687, வாக்குச்சாவடிகள் 867. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மொத்த வாக்காளர்கள் விவரம் ஆண் 364293, பெண் 365193, இத ரர் 49, மொத்தம் 729535, மொத்த வாக்குச் சாவடிகள் 944. வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டி யலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பமோ, அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது அப்பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை தர விரும்புவோர், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தக்க கோரிக்கையோ மறுப்புரையோ முத லில் தந்து அதன் மூலம் தக்க மாற்றத்தை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டிய லின் இணையான பதிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை, மாற்றம் கோரி வரப் பெறும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரை களின் மேல், சம்மந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலு வலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும் ஆணைகள் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப் படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், நகராட்சி ஆணையாளர்கள் ராஜமாணிக்கம் (குளச்சல்), காஞ்சனா (பத்மநாபபுரம்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றா லிங்கம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.