மதுரை, ஜூலை 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டு தாம தத்திற்குப் பிறகு, அஞ்சல் நியமன தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள் ளன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், சு.வெங்க டேசன் எம்.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2020 நவம்பர் 29 இல் நடத்தப்பட்ட அஞ்சல் துறை குரூப்- பி தேர்வுகளின் முடிவுகள் இரண்டரை ஆண்டுகளாக வெளியிடப்படாததையும், அதற்கு தடையாக சொல்லப்பட்ட நீதி மன்ற வழக்கும் முடிவுக்கு வந்து விட்டதை யும், தாமதம் காரணமாக 100 அஞ்சல் மாவட்ட சேவைகள், ஐந்தாண்டு காலி இடங்கள் நிரப்பப்படாததால் பாதிக்கப் பட்டு இருப்பதையும் நான் 30.04.2022 அன்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்க்கு கடிதம் எழுதி இருந் தேன். அதற்கு அமைச்சரிடமிருந்து பதில் வந்துள்ளது. 01.06.2022 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதென்றும், அது www.indiapost.gov.in தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித் துள்ளார். தீர்வு காணப்பட்ட தகவல் ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தாலும், இரண்டரை ஆண்டு பிரச்சனை முடி வுக்கு வந்து ஐந்தாண்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.