districts

img

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாவட்ட படைப்பாளிகளின் நூல்கள் வெளியீடு

புத்தகத் திருவிழாவில் இன்று

புத்தகத் திருவிழாவில் இன்று புத்தக திருவிழாவில் சனிக்கிழமையன்று காலை 11 மணி அளவில்  எழுத்தா ளர் என்.இராமகிருஷ்ணன் நினைவு மேடையில் மாணவ, மாணவியர்களின் பார்வையில் வாங்கினேன், வாசித்தேன், சொல்கிறேன் என்ற தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது.  மாலை 7 மணிக்கு நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் நினைவு மேடை யில் சிந்தனையரங்கத்தில் சிகரம் சிலந்திக்கும் எட்டும் என்ற தலைப்பில் இல்லம் தேடிக்கல்வி சிறப்பு அலுவலர் க.இளம்பகவத், கதைகளும் கதை மாந்தர்களும்  எனும் தலைப்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

திண்டுக்கல், அக்.7- திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் வெள்ளி யன்று காலை மாவட்ட அளவிலான எழுத்தாளர் கள் சந்திப்பு மற்றும் நூல்  வெளியீட்டு விழா நடை பெற்றது.  சிந்தனையரங்கத்தில் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி நினைவு மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இலக்கிய களத்தின் சார்பாக பெ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அ.வைத்திய லிங்க பூபதி வரவேற்றார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ, கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராம், சக்திஜோதி, தமிழ் பித்தன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வரத.இராஜ மாணிக்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் துணைத்தலைவர் சுந்தரசோ மன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திண்டுக்கல் மாவட்ட எழுத்தாளர்கள் துரை.தில்லான், ராஜ கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் முனை வர் ஜே.பால்பாஸ்கர் எழுதிய தண்ணீர் யாருக்குச் சொந்தம், தமிழக சுற்றுச் சூழல் போற்று நேற்று இன்று நாளை, புகழ்மிக்க விசாரணைகள், ஆகிய புத்த கங்கள் வெளியிடப்பட்டன. கலாம் சுரேஷ் எழுதிய கடலி லிருந்து சில துளிகள், திண்டுக்கல் கலையரசு எழுதிய மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா, கவிஞர் இலமு எழுதிய சிகப்பு டிரா கன் தாரிகாமி, கவிஞர் முராநி எழுதிய ஒத்திசைவும் முரண்பாடும், வா அன்பே பேசலாம், ம.சி.கந்தவேல் எழுதிய விடலைப்பருவம், சதீஸ் எழுதிய வாகை சூட வா, கவிதா செந்தில்குமார் எழுதிய உயிர்போர், நா. சோமசுந்தரம் எழுதிய ஆகாய விமானம் ஓர் அறி முகம், ப.மகாலட்சுமி எழுதிய தமிழ் இலக்கி யத்தில் பெண்ணியம் ஆகிய திண்டுக்கல் மாவட்ட படைப்பாளிகளின்  நூல்கள் வெளியிடப்பட்டன. பொறி யாளர் சின்னதுரை நன்றி கூறினார். (நநி)