பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக பழனி மதீனா நகர் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.குருசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே பாலபாரதி,நலக்குழுவின் மாநிலப்பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் , மாநிலக்குழு உறுப்பினர் கே சௌகத் அலி ஆரிஸ் பாபு, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா முன்னாள் நகர் மன்ற தலைவர் வ. ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் வ.கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர். காதர் ஷெரிப் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.