திண்டுக்கல், ஜுலை 6- நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உட னடியாக துவக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை இன்சூரன்ஸ் அமைப்பு களான நியூ இண்டியா, யுனைடெட் இந் தியா, நேசனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊழி யர்கள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேசனல் அதிகாரிகள் சங்க தலைவர் மூவேந்தன் தலைமை ஏற்றார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் மாவட்டத்தலைவர் பெரியசாமி, மாவட்டச்செயலாளர் கௌதமன், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (நநி)