விருதுநகர், ஏப்.2- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்து, பாசிப் பருப்பு, வத்தல், காபி ஆகிய வற்றின் விலை ஒரே வாரத்தில் வர லாறு காணாத அளவுக்கு உயர்ந் துள்ளது. இதனால், நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே அத்தியாவசிய உணவு பொருடகள் சட்டத்தின் கீழ் விலை யை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பி னர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம், ஏராளமான உணவுப் பொருட்க ளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் முண்டு வத்தல் 100கிலோ ரூ,12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் இந்த வாரம், 5 ஆயிரம் வரை உயர்வு ஏற்பட்டு, 17 ஆயி ரம் முதல் 21 ஆயிரம் வரை விற் பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு ( புதுஸ்நாடு) ரூ.10300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் ரூ. 900 உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.11, 200க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நயம் புதுஸ் லையன் வகை துவரம் பருப்பானது கடந்த வாரம் ரூ,11,100க்கு விற் கப்பட்ட நிலையில் தற்போது 900 வரை உயர்வு ஏற்பட்டு குவிண் டால் ஒன்று ரூ,12ஆயிரத்திற்கு விற் பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்து ( நாடு) விலை யானது கடந்த வாரம் 100 கிலோ, 10,800க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ,400 வரை உயர்வு ஏற் பட்டு குவிண்டால் ஒன்று ரூ.11, 100 என்ற விலைக்கு விற்கப்படு கிறது.
இதேபோல் 100 கிலோ நாடு பர்மா எப்,ஏ,க்யூ வரை உளுந்து கடந்த வாரம் ரூ, 8700க்கு விற்ப னையான நிலையில் இந்த வாரம் ரூ.9100க்கு விற்கப்படுகிறது.தொலி உளுந்தின் விலையும் கடந்த வாரத்தை விட ரூ,400 உயர்ந்து தற்போது ரூ, 9600க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் நாட்டு உளுந்தின் விலையும் கடந்த வாரத்தை விட ரூ,400 உயர்ந்து 8200க்கும், லயன் உளுந்து வகையும் ரூ.600 உயர்ந்து 8200க்கும் விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு- கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பருப்பு ,10ஆயி ரத்திற்கு விற்ற நிலையில் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயரந்து ரூ.10,300க்கு விற்கப்படு கிறது- பாசிப் பயறு நாடு வகையானது கடந்த வாரம் ரூ.7800க்கு விற்ற நிலையில் திடீரென ஒரே வாரத்தில் ரூ.500 உயர்ந்து தற்போது ரூ. 8300க்கு விற்கப்படுகிறது, இந்தியா லயன் மீடியம் வரை பாசிப்பய றின் விலையும் மூட்டை ஒன்றுக்கு ரூ,700 உயர்ந்து தற்போது ரூ.10, 800க்கு விற்பனை செய்யப்படு கிறது.
இந்த விலை உயர்வினால் சாதா ரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உணவக உரிமையா ளர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளளனர்,
உச்சத்தில் காபி விலை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு காபி வகைகளின் விலை திடீ ரென உயர்த்தப்பட்ட நிலையில் இந்த வாரமும் வரலாறு காணாத வகையில் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, இதனால். தேநீர் விற்பனைக் கடை உரிமை யாளர்கள் பெரும் பாதிப்படைந் துள்ளனர். காபியின் விலையை உயர்த்தினால், வாடிக்கையா ளர்களின் வரத்து குறைந்து வியா பாரம் பாதிக்கப்படும் என்ற கலக் கத்தில் உள்ளனர், காபி பிளாண்டேசன் பி.பி 50 கிலோ கடந்த வாரத்தை விட ரூ.1600 உயர்ந்து தற்போது ரூ.20,100க்கு விற்கப்படுகிறது, இதேபோல் ஏ வகை காபி பிளாண்டேசன் விலையும் ரூ.1600 உயர்ந்த தற்போது ரூ.20,600க்கு விற்கப்படுகிறது, சி வகை காபி ரூ.1300 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது 17,300க்கும், ரோபஸ்டா பிபி வகை 50 கிலோ கடந்த வாரத்தை விட ரூ, 800 உயர்ந்து தற்போது ரூ.10,700க்கும் பிளாக் பிரவுன் வகை காபி 50 கிலோ கடந்த வாரத்தை விட ரூ.1100 உயர்ந்து தற்போது ரூ.9600க்கும் விற்பனை செய்யப் படுகிறது. ஒரே நேரத்தில் வத்தல், பருப்பு வகைகள் மற்றும் காபி வகை களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி யாக இந்த விலை உயர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டு மெனவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி, பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரி கள் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ள உணவுப் பொருட் களை வெளியே கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்துள்ள னர்.