மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் முன்னிலையில் ஏப்ரல் 25 அன்று நடைபெற்றது. இதில உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.