districts

மதுரை முக்கிய செய்திகள்

தோழர் ராமமூர்த்தி காலமானார்

மதுரை அக்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை அலங்கா நல்லூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும்  ஆர்.எம்.எஸ் தென்  மண்டலப் பொறுப்பாளருமான  தோழர் து.ராமமூர்த்தி (வயது 65) காலமானார்.  அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன்,முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், விவ சாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கண்ணன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த து.ராமமூர்த்திக்கு கோகிலா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

விருதுநகர், அக்.7- குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறை தீர்வு முகாம் இன்று (அக்.,8.) 2வது சனிக்கிழமை  அனைத்து வட்டங்களிலும்  உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும். எனவே, ரேசன்கார்டுதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என   மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார் செய்திக்குறிப்புவெளியிட்டுள்ளார்.

சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி  

சின்னாளப்பட்டி அக்.7- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் வீடுகளில் வாங்கும் குப்பைகளை கொடைரோடு-நிலக்கோட்டை நெடுஞ்சாலையோரம் கொட்டி தீவைக்கின்றனர்.  இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டி கள் மற்றும் மக்கள் புகைமண்டலத்தால் அவதிப்படு கின்றனர். எதிர்வரும் வாகனங்கள் தெரியாமலும்,கண்எரிச்சல்,சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை குப்பைக் கிடங்கிற்கு கொண்டு சென்று அழிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

போடி அருகே விபத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பலி

தேனி, அக். 7- தேனி மாவட்டம்,     போடியை அடுத்த கோணாம் பட்டி வடமலைராஜபுரத்தை சேர்ந்தவர்  காந்தி மகன் செல்வம்  (43). இவர் எரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவ ராக இருந்தார்.  வியாழன் கிழமை மாலை போடிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ராசிங்காபுரம் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஆடு ஒன்று தாவி குதித்து சாலையில் ஓடியது. திடீரென ஆடு குறுக்கே பாய்ந்ததில் ஆட்டின் மீது மோதிய செல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தார். அவரை போடி அரசு மருத்துவ மனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி  க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி லும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செல்வத்தின் மனைவி பாப்பு (41) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிமெட்டு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் காயம்

தேனி, அக். 7-   காரைக்குடி, சிவகங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சில பேருந்துகளில் கேரள மாநிலம் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ள னர். பேருந்துகள் போடி, போடிமெட்டு வழியாக மூணாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. கேரள மாநிலம் தோண்டிமலை என்ற இடத்தில் வளைவில் திரும்பிய ஒரு மினி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேரில் 13 பேர் காயமடைந்தனர். காரைக்குடியை சேர்ந்த விமலா (42), அமுல்மேரி (55), ரிஜோ (26), அப்துல்லா (24), செல்வ ராஜ் (62),சசிகலா (34) உள்ளிட்ட 13 பேர் ராஜகுமாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இந்த. விபத்து குறித்து கேரள மாநிலம் சாந்தாம் பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

மணல் திருட்டு ; ஒருவர் கைது

திருச்சுழி,அக்.7-  திருச்சுழி வட்டம்,  நல்லுக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் கிராம உதவியாளர் சசிக் குமார் ஆகியோர், காவல்துறையினருடன்  வீரசோழன் மற்றும் அதனைச்சுற்றியுள்ள  பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது பாப்பாங்குளம் மற்றும் வீரஆலங்குளம் கிராமங்களுக்கிடையே உள்ள   குண்டாற்றின் அருகே   அரசு விதிமுறைகளை மீறி,  டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர்  அந்நபரை மடக்கிப்பிடித்தனர். பின்பு, அவரிடம் நடத்திய விசார ணையில்  வீரஆலங்குளம் கிராமத்தைச்சேர்ந்த  தவமுத்து (48) என்பதும்  மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்பு, அவரை கைது செய்த போலீசார், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

மம்சாபுரத்தில் இணை நோய்களால் பாதித்தவர்களுக்கு  சத்து மாத்திரைகள் வழங்க கோரிக்கை

திருவில்லிபுத்தூர், அக்.7-  திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ்  சர்க்கரை நோய், பிரெஸர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மாதந்தோறும் மாத்திரை வாங்குகின்ற நபர்களுக்கு இணை நோய்களுக்கான மாத்திரையோடு சத்து மாத்தி ரைகள் வழங்கப்படுவது வழக்கம். மம்சாபுரம், இடையன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இணை நோய்களுக்கான மாத்திரை வாங்குபவர்களு க்கு சத்து மாத்திரை வழங் காத நிலைமை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு உறுப்பின ரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டார செய லாளருமான பெருமாள் கூறு கையில், நான் பிரஷர் நோயால் பாதிக்கப்பட்டுள் ளேன். மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக  தொடர்ந்து மாத்தி ரை வாங்கி வருகிறேன். தற்போது மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக பணியாளர் நேரடி யாக வீட்டிற்கு வந்து எனக்கு மாத்திரைகள் வழங்கி வரு கிறார். கடந்த மூன்று மாதங்க ளாக பிரஷர் மாத்திரை மட்டும் வழங்கப்பட்டு வரு கிறது. சத்து மாத்திரை வழங் கப்படுவதில்லை. சத்து மாத்திரை வழங்காததால் உடலில் சோர்வு ஏற்படு கிறது என்று கூறினார்.

சத்து மாத்திரை வழங்கா தது குறித்து மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளரி டம்  கேட்ட போது, இணை நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப சத்து மாத்தி ரைகள் வழங்கப்படுவ தில்லை. உதாரணமாக ஆயிரம் நோயாளிகள் இருந் தால் 500 பேருக்குத்தான் சத்து மாத்திரை வருகிறது. மீதி 500 பேருக்கு வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. முழுமையான அளவில் மாத்திரை வந்தால் தான் அனைவருக்கும் வழங்க முடியும் என்றார். மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கலா கூறுகை யில், சத்து மாத்திரைகள் இடையில் வரவில்லை. வியாழக்கிழமையன்று வந்துள்ளது. இணை நோய்க ளால் பாதிக்கப்பட்டு சத்து மாத்திரை வாங்காத நோயா ளிகளுக்கு பணியாளர்கள் மூலம் வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய் யப்படும் என்று கூறினார்.  பொதுவாகவே ரெட்டிய பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட மம்சாபுரம் ,வன்னியம்பட்டி, மானகசேரி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் கடந்த சில மாதங்களாக வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் வருவது இல்லை .அதற்கு பதிலாக கால்சியம் மாத்திரைகள் இணை  நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றனர் . மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு சத்து மாத்திரைகள் தொய்வு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.