districts

img

குளத்தில் சிறுவன் சடலம் - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: நேரில் எஸ்.பி. விசாரணை

நாகர்கோவில், மே 15- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்  பாண்டி பேரூராட்சி திட்டுவிளை அருகே குளத்தில் மர்ம முறையில் பலியான மாணவர் ஆதில் வழக்கில் நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்  டம் செய்தனர். எஸ்.பி.ஹரி கிரண் பிரசா‌த் விசாரணை நடத்தினார்.  கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நிஜிபு. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரு டைய மனைவி சுஜிதா. இவர்க ளுக்கு மகனும் மகளும் உள்ளனர். இதில் மகன் ஆதில் முகமது (12) ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சுஜிதாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் உள்ளது. இந்த நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சுஜிதா குழந் தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6 ஆம் தேதி மதியம் ஆதில் முகமது வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றான். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பூதப் பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த னர். இந்தநிலையில் மாயமான மாணவன் 2 நாட்கள் கழித்து திட்டு விளையை அடுத்த மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் பிண மாக மீட்கப்பட்டார். மகன் சாவில் மர்மம் இருப்பதாக சுஜிதா பூதப்  பாண்டி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வந்தனர். தனிப்படையினர் நடத்திய விசா ரணையிலும் முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே சனியன்று  (மே 14) மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் திட்டு விளை பகுதியில் விசாரணை மேற்கொண்டார். இறந்த மாணவ னுடன் பழகிய நண்பர்களின் வீடு களுக்கு சென்று விசாரித்தார். பின்னர் ஆதில் முகமது பிணமாக கிடந்த குளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் வழக்கை முறையாக விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பலி யான மாணவனின் குடும்பத்திற்கு தகுந்த நீதி வழங்க கோரி திட்டு விளை பகுதி பொது மக்கள் சாதி மத பேதமின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.