districts

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கிடுக!

விருதுநகர், மார்ச் 15- கொரோனா பரவலைக் காரணம் காட்டி கடந்த 2020 மார்ச் 21 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரைக் கோட்டத்தில் திருநெல்வேலி முதல் மயிலாடுதுறை, இணைப்பு ஈரோடு வரை வந்து சென்ற பயணிகள் ரயிலா னது நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த வண்டியானது, நெல்லையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் சந்திப்பு ரயில் நிலையத்திலி ருந்து இரு ரயில்களாக திருச்சி வழியாக தஞ்சாவூர், மயிலாடுதுறை வரைக்கும் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கும் இணைப்பு ரயிலாக இந்த வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் வண்டியை அரசு ஊழி யர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், புனித ஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். இதேபோல் மதுரை-செங்கோட்டை ரயிலானது இரு மார்க்கமாக இயக்கப் பட்டு வந்தது. இந்த இரு வண்டிகளும் நிறுத்தப்பட்டது. தற்போது, ஒரே மார்க்க மாக காலை 7.10 மணிக்கு மதுரையிலி ருந்து செங்கோட்டைக்கும், மாலை 3.20 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், கடந்த காலங்களில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கும் புறப்படும் பயணிகள் ரயிலா னது, மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 10.30 மணிக்கு வந்தடையும். மீண்டும் 11.20க்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடைந்தது.

மறுமார்க்கத்தில், செங்கோட்டை யிலிருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயிலானது, மாலை 4.20க்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். மீண்டும், அங்கிருந்து  5.20க்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. அதாவது நாளொன்றுக்கு இரு ரயில்களும் 3 முறை இந்த வழித் தடத்தில் சென்று வந்தன. மேலும், இந்த ரயிலானது, தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை வரை செல்லும் பயணிகள் ரயிலின் இணைப்பு ரயிலாகவும் இருந்தது.

இந்த ரயிலின் மூலம் மதுரை, விருது நகர், தென்காசி, திருநெல்வேலி மாவட் டங்களைச் சேர்ந்த ஏராளமான பயணி கள் மற்றும் பொதுமக்கள் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு எளிதில் சென்று வந்தனர். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன் கோவில் கோமதியம்மன் கோவில், தென்காசி காசி விசுவநாதர் ஆலயம், கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஆஞ்ச நேயர் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இந்த வண்டியின் மூலம் குறைந்த செலவில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.  மேலும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குறைந்த செலவில் கேரளாவில் உள்ள  புகழ்பெற்ற சித்திரைத் திருநாள் மருத்துவ மனைக்கும் இந்த வண்டி மூலம் சிகிச் சைக்காக சென்று வந்தனர். தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை -செங்கோட்டை பயணிகள் ரயில் கட்ட ணமானது, விரைவு ரயில் கட்டணமாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருந்த போதும் பொதுமக்கள் இதை தொடர்ந்து பயன்படுத்த தயாராக உள்ள னர். தற்போது, கொரோனா பரவல் குறைந்து சகஜ நிலை ஏற்பட்டு வரும் சூழலில், பயணிகள் ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்காததால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எனவே, காலம் தாழ்த்தாமல், தென்  மாவட்டங்களில் நடைபெற்று வரும் பங்கு னித் திருவிழா, புகழ் பெற்ற மதுரை சித்தி ரைத் திருவிழாவையொட்டி கொரோனா பரவலைக்  காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை-மயிலாடு துறை-ஈரோடு பயணிகள் ரயில் மற்றும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்  ஆகியவற்றை வழக்கம் போல் இயக்கிட வேண்டுமென பயணிகள் மற்றும் தென் மாவட்ட மக்கள் தெற்கு ரயில்வே நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.