districts

img

மண்சரிந்து பலியான தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கல்

மதுரை, ஜூன் 4- மதுரை மாவட்டம், விளாங்குடி கிராமம், ராம மூர்த்தி நகர் மெயின் வீதி யில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாய்  அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.ஜூன் 3 வெள்ளியன்று பணியின் போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட மண்  சரிவினால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்  டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (வயது 34) என்ப வர் கோரமாக உயிரிழந்தார்.  உயிரிழந்த சதீஷின் மனைவி தேவிக்கு தமிழ்நாடு  முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து ரூ.5 லட்  சம் வழங்குவதற்கு முதல மைச்சர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை அரசு  இராசாசி மருத்துவமனை யில் முதலமைச்சர் அறிவித்த பொது நிவாரண நிதியிலி ருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், தனியார் ஒப்பந்ததாரர் வழங்கிய நிவா ரணத் தொகை ரூ.10 லட்சத்  திற்கான காசோலை என மொத் தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை தொழி லாளி குடும்பதினருக்கு மேயர் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் டி.நாக ராஜன் ஆகியோர் சனிக்கிழ மையன்று வழங்கினர்.