தேனி, ஜூன் 21- தேனி ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மாற் றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உத விகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கி னார். குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அளித்த 121 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் தரும் கோரிக்கை மனுக்களை கனி வுடன் பரிசீலனை மேற் கொண்டு உரிய தகவலை அவர்களுக்கு அளித்திட வேண்டும் என அலுவலர் களுக்கு ஆட்சியர் உத்தர விட்டார். கூட்டத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி கள் வசதிக்காக சைகை மொழிபெயர்ப்பு செய்யப் பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்ட 3 மாற் றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,500 வீதம் ரூ.3,16,500 மதிப்பிலான பிரத்யேக ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 10,185 மதிப்பிலான. உருப் பெருக்கி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.காமாட்சி, முடநீக்கியல் வல்லுநர் கார்த்திக் பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.