districts

img

தரமான காதொலி கருவி வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, மே 23- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் காது கேளா தோர் மற்றும் வாய் பேச இயலாதோர் திருச்சி மாவட்ட சிறப்பு மாநாடு ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற் றது.  மாநாட்டிற்கு மாநில துணை செயலாளர் புஷ்பநாதன் தலைமை வகித்தார். செய்கை மொழி பெயர்ப்பாளர் சுமா அணி ரேச்சல் துவக்க உரையாற்றினார். மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், மாநகர் மாவட்ட செயலா ளர் கோபிநாத், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் முனைவர் ஜானகி. ராஜா சிறப்புரையாற்றினார். செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி களுக்கு தற்போது அரசாங்கத்தால் வழங்கப் பட்டு வரும் இலவச காதொலி கருவியை உரிய ஆய்வு செய்து தரமான காதொலி கருவி யாக வழங்க வேண்டும். அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் ஒரு சதவீத இட ஒதுக் கீட்டை முழுமையாக அமல்படுத்தி வேலை வாய்ப்பை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  75 சதவீதத்திற்கு மேல் உள்ள காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனா ளிகள் அனைவருக்கும் கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகை  ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு  ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி உடனே வழங்க  வேண்டும். இலவச வீடு வழங்கும் திட்டத் தின் கீழ், இலவச வீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மே 31 ஆம் தேதி திருச்சி பாலக்கரையில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவராக சி.  புஷ்பநாதன், செயலாளராக தங்கப்பன், பொருளாளராக அசோக்குமார், துணை தலை வர்களாக நிவாஸ், இந்துமதி, துணை செயலா ளர்களாக சுமதி, ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர்களாக பாஸ்கர், குமரவேல், காசிம், ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர்.