ஒட்டன்சத்திரம், ஏப்.30- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை யில் காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதற்காக கட்டப் பட்டு மூன்று வருடங்களாக காட்சி பொருளாக இருக் கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை யில் ஆதிதிராவிடர் காலனி யில் 100-க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளது. இடையகோட்டை நங் காஞ்சியாறு அணையில் ஆழ்துளை கிணறு அமைக் கப்பட்டு இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. சில மணி நேரம் குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுத்த மான குடிநீர் வழங்க வேண் டும் என்பதற்காக ஊரக குடி யிருப்புக்களுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் இடையகோட்டை ஆதிதிரா விடர் காலனியில் காளியம் மன் கோவில் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப் பட்டது. ஆனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் காவிரி குடிநீர் ஏற்றி விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுக் காத நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காட்சி பொரு ளாக உள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காவிரி குடிநீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.