districts

img

விளக்க அட்டை அணிந்து மூட்டா போராட்டம்

நாகர்கோவில், அக். 12 தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் கூட்டமைப்பு பணிமேம்பாடு எம்.எஸ்.எண்-5ஐ அமல்படுத்த நடவடிக்கை, பி எச்டி, எம்பில் ஊக்க உதிய உயர்வு மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் குளறுபடி ஆகியவற்றை தமிழக அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக்கல்லூரி வாயிற் முன்பு விளக்க அட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் தெ.தி. இந்துக்கல்லூரி முன்பு ஆசிரியர் கூட்டமைப்பில் ஒர் அங்கமான மூட்டா  சங்கத்தின் மத்திய தலைவர் முனை வர் இராதாகிருஷ்ணன் முன்னிலையில் போராட்டம்   நடைபெற்றது.  போராட்டத்திற்கு முனைவர் விஜய லட்சுமி தலைமை தாங்கினார். முனைவர் மகேஷ் , உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். முனைவர் வில்சன் நன்றியுரையாற்றினார்.