மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவையை உடனடியாக துவங்கிட கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 39 ஆவது நாளாக ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் பெரிய ஊர்சேரி கிராம பெண்கள் பங்கேற்றனர்.