districts

img

நிரந்தர தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு

திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் பனியன் கம்பெனியில் நிரந்தரத்  தொழிலாளர்களுக்கு வேலை மறுத்துவிட்டு , புலம்பெயர்ந்த தற்காலிகத் தொழிலாளர் களை வைத்து வேலை செய்த நிர்வாகத்தைக்  கண்டித்து  சிஐடியு தலைமையில் தொழிலா ளர்கள் ஆலை வாயிலில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் வேலம்பாளையம் அருகே தண் ணீர் பந்தல் பகுதியில் ஜூபிடர் பனியன் கம் பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் செக்கிங் பிரி வில் பெண்கள் சுமார் 50 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் 2  ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனு பவம் உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில் கடந்த சில மாதங் களாக  அவ்வப்போது வேலை இல்லை என்று  நிர்வாகம் இவர்களுக்கு அடிக்கடி விடுமுறை அளித்து வந்துள்ளது. அதேசமயம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தற்காலிக அடிப்படையில் அமர்த்தி செக்கிங் பிரிவு வேலையைத் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் நிரந்தரத் தொழிலாளர் கள் சிஐடியு சங்கத்தின் மூலம் நிர்வாகத்தைத்  தொடர்பு கொண்டு, தொடர்ந்து வேலை வழங் கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் நிர்வாகம் உரிய பதில் அளிக்காமல் இப்பிரச் சனையை தட்டிக்கழித்து வந்தது. இந்த  நிலையில் சனிக்கிழமை காலை செக்கிங்  தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது  வேலை இல்லை என்று விடுமுறை அளிப்ப தாக நிர்வாகத் தரப்பில் கூறியுள்ளனர். இதை யடுத்து அந்த பெண் தொழிலாளர்கள் சுமார்  50 பேர் ஜூபிடர் கம்பெனி நுழைவாயில் முன் பாக தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் அங்கு  சென்று இப்பிரச்சனை குறித்து நிர்வாகத் துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேச மயம் தகவல் அறிந்து காவல் உதவி ஆணை யர், வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் உள்பட காவல் துறையினர் அங்கு குவிந்த னர்.நிர்வாகத்தரப்பில் திங்கள்கிழமை வேலை அளிப்பதாக கூறப்பட்டது. காவல் துறையும் நிர்வாகம் சொன்னதை கேட்டு கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் தொழிலாளர்கள் உறுதியாக அதை நிராக ரித்து விட்டு போராட்டத்தைத் தொடர்ந்த னர். கம்பெனியில் வேலையில்லை என்றால்  அனைவருக்கும் விடுமுறை விட்டால் சரி.  ஆனால் தங்களுக்கு வேலை மறுத்துவிட்டு தற்காலிக தொழிலாளர்களை அமர்த்தி வேலையைத் தொடர்வதை ஏற்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறினர். சுமார் மூன்று மணி நேரம் உறுதியாக இப் போராட்டம் தொடர்ந்த நிலையில், ஜூபிடர்  நிர்வாகம் உள்ளே வேலை செய்தவர்களுக் கும் விடுமுறை அறிவித்தது. திங்கள்கிழமை முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் சீரான முறையில் வேலை அளிப்பதாக நிர் வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை  ஏற்று சிஐடியு தொழிலாளர்கள் போராட் டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென் றனர்.