100 நாள் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்
வெம்பக்கோட்டை, அக்.27- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அர சானது, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து வருகிறது. மேலும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டுமென வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெம்பக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் லட்சுமி தலை மையில் பெருமாள்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எம்.முனியசாமி கண்டன உரையாற்றினார். முடிவில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கிய அமைச்சர்
சிவகங்கை, அக்.27- சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ். புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆட்டோ, வேன், டிராக்டர் ஓட்டுநர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று சீருடைகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலா ளர் சண்முகவடிவேலு, பாலசுப்பிரமணியன், மாணிக்கம், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
450 ஊராட்சிகளிலும் நவ.1-ல் கிராம சபை
விருதுநகர், அக்.27- நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்டு கொண்டி ருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து விவாதித்தல், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மானியத்துடன் வங்கிக்கடன் தாட்கோ அறிவிப்பு
விருதுநகர், அக்.27- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதார ரீதி யாக முன்னேற்றமடைய தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 விழுக்காடு அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும். இத்திட்டத்தின்படி 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உப கரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். எனவே, விருப்பமுள்ளோர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தாட்கோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓட்டை, உடைசல் பேருந்துகள் மாற்றப்படுமா?
ஒட்டன்சத்திரம், அக்.27- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில் இருந்து திண் டுக்கல், பழனி, வேடசந்தூர், பொருளூர், கள்ளிமந்தை யம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான நகர பேருந்துகள் ஓட்டையும் உடைசலுமாக உள்ளன. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொருளூர் செல்வதற்காக நின்று இருந்த அரசு நகர பேருந்தை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்த போது செல்ப் வேலை செய்யவில்லை. இதனையடுத்து பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் கீழே இறங்கி பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் கொலை: ஒருவர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
தேனி, அக்.27- பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (27). ஆட்டோ ஓட்டுநர் இவருக்கும் அருகில் குடியிருக்கும் கருப்பையா என்பவருக்கும் முன்விரோ தம் இருந்த வந்துள்ளது. இந்நிலையில், வியாழனன்று மது போதையில் பார்த்திபன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இத னால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உரு வானது. இதனைத் தொடர்ந்து கருப்பையா, அவரது மகன் முத்துப்பாண்டி, மருமகன் ராஜவேல் ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கருப்பையா காவல் நிலை யத்தில் ஆஜரானார். தலைமறைவான முத்துப்பாண்டி, ராஜவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்கிட விவசாயிகள் கோரிக்கை
இராமநாதபுரம், அக்.27- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலை மையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் HDFCERGO புழு நிறுவ னத்தின் மூலம் 65 வருவாய் கிராமங்களுக்கு காப்பீட்டு தொகை இல்லாத கிராமங்க ளாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய் யக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் பயிர்க்கடன் மற்றும் பயிர் காப்பீடு, நெல் கொள்முதல் செய்ய அடங் கல் வழங்கிட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவ டிக்கை எடுப்பதாக தெரி வித்தார். கூட்டத்தில் வேளா ண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வேளா ண்மை) தனுஷ்கோடி, கூட்டு றவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக் குமார் மற்றும் அரசு அலு வலர்கள், விவசாய பெரு மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.