மோடி அரசை அகற்றுவோம், இந்திய நாட்டை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ஒன்றியத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் எரியோடு, புதுரோடு, கோவிலூர், ரெங்கநாதபுரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இவ்வியக்கத்தில் சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, வேடசந்தூர் ஒன்றியச்செயலாளர் டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.