districts

img

விவசாயிகள் சங்க போராட்ட அறிவிப்பால் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உறுதி

சின்னாளப்பட்டி, ஏப்.28-  திண்டுக்கல் மாவட்டம் கன்னி வாடி வனச்சரகத்திற்குட்பட்ட பண் ணைப்பட்டி, சிறியன்காடு, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி நடமாட்டத்தால் விவசாய பயிர்கள் மட்டுமல்லாது வீடுகளும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறையினரிடமும் ஆடலூர், பன்றிமலை ஊராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே போராட்டம் நடத்தப் பட்டு,அதில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.  ஆனாலும் நடவடிக்கை எடுக்காத தால்  ஏப்ரல் 28 அன்று சாலை மறியல்  நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  இதையொட்டி வனத்துறை அதி காரி சக்திவேல் கன்னிவாடி காவல்  ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை யினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையில் கொடைக்கா னலில் இருந்து சிறப்பு வீரர்கள் வர வழைக்கப்பட்டு யானைகள் வராதவாறு பாதுகாக்கப்படும், பயிர்களுக்கு நிவா ரணம் கொடுக்கப்படும், அகழி மற்றும் சோலார் விளக்குகள் உடனடியாக அமைக்கப்படும் என்று கூறினர்.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்   மாவட்டச் செயலாளர் என். பெருமாள், ஒன்றியத் தலைவர் தங்க சாமி, ஒன்றியச் செயலாளர் தயாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர், கே.எஸ்.சக்திவேல், ஜெயக்குமார், ஹக்கிம், ஆறுமுகம், பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மானாமதுரை மகளிர்