சென்னை, பிப். 21- விவசாய உற்பத்தி பெருகுகி றது; விவசாயிகளின் வருமானம் சுருங்குகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கவிஞர் நா.வே.அருள் எழு திய ‘பச்சை ரத்தம் – (இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்) கவிதை தொகுப்பு, ‘இந்திரஜாலம் இந்திரனின் கவிதை பரிசோதனை கள்’ (ஒரு விசாரணை விமர்சன நூல்) ஆகியவற்றின் வெளியீடு நிகழ்ச்சி ஞாயிறன்று (பிப்.20) சென்னை புத்தகக் காட்சி அரங் கில் நடைபெற்றது. பாரதி புத்தகா லயம், யாளி பிரிண்ட்ஸ், ஆனந் தாயி பதிப்பகம் மற்றும் சித்து டிஜிட்டல் பிரிண்ட் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ் வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு தலைமை வகித்தார். ‘பச்சை ரத்தம்’ கவிதை தொகுப்பை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட, முதல் பிரதியை கோ.வசந்த குமாரன் பெற்றுக் கொண்டார். இந்த நூல் குறித்து புலவர் பா.வீர மணி, யூடியூபர் ஐயன் கார்த்தி கேயன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் உரையாற்றினர்.
‘இந்திரஜாலம்’ நூலை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் வெளியிட, தமிழ் இந்து திசை மூத்த துணை ஆசிரியர் ம.சுசித்ரா பெற்றுக் கொண்டார். ஜமாலன் விமர்சன உரையாற்றினார். கவி ஞர் இந்திரன் சிறப்புரையாற்றி னார். நா.வே.அருள் ஏற்புரை யாற்றினார். பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் வரவேற்றார். ந.ஜய ராமன் நன்றி கூறினார். கவிஞர் உமாமோகன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். முன்னதாக, இந்நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில்“பிறந்த மண்ணை, பண் பாட்டை, கலாச்சாரத்தை மறந்து நகரவாசிகளாக மாறி வரு கிறோம். கிராமத்தில் உள்ள விவ சாயிகளை பற்றி கீழான பார்வை கொண்டவர்களாக சிலர் உள்ள னர். ஆனால் கவிஞர் நா.வே. அருள், பிறந்த மண்ணுக்கு நேசமாக கவிதை படைத்துள்ளார். கிராமத்து வார்த்தைகளை கை யாண்டு உணர்வுப்பூர்வமாக கிரா மத்து வாழ்வை வாழ்ந்து வரு கிறார்” என்றார். மேலும், “இந்திய வரலாற் றில் 386 நாட்கள் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி, மோடி அரசாங்கத்திற்கு எதிராக தில்லி யில் ஒரு போட்டி அரசாங்கத் தையே நடத்தினர். மோடி பொறுப் பேற்ற பிறகு ஏராளமான போராட் டங்கள் நடந்தாலும், அவரது தோல்வியை ஒப்புக் கொண்டு சட் டத்தை திரும்ப பெற வைத்தது விவசாயிகள் போராட்டம் தான்.
அதன் ஒவ்வொரு அம்சத்தை யும் ரத்தின சுருக்கமாக நா.வே. அருள் கவிதையாக படைத் துள்ளார்” என்றும் அவர் கூறி னார். தில்லி விவசாயிகள் போராட் டம் குறித்து பல நூல்கள் வந்தி ருந்தாலும், ஒரு கவிதை தொகுப் பாக முதன்முதலாக இந்த நூல் வெளிவந்துள்ளது. விவசாயி வர்க் கம் பாராட்டும் கவிஞராக கவிஞர் நா.வே.அருள் மிளிர்ந்துள்ளார் என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன் “உலகம் வாழ்கிறது விவசா யம் தேய்கிறது. உற்பத்தி பெரு குகிறது, விவசாயிகளின் வரு மானம் சுருங்குகிறது. உற்பத்திக் கான திட்டங்கள் வகுக்கப்ப டுகிறது, விவசாயிகளை முன் னேற்ற திட்டங்கள் இல்லை. இது தான் இன்றைய விவசாயிகளின் நிலையாக உள்ளது” என்றார். “உணவை உருவாக்கும் பிரம்மாக்களாக விவசாயிகள் உள்ளனர். அத்தகைய விவசாயி களின் வாழ்க்கை போராட்டத்தை கவிதையாக படைத்துள்ளார். இன்னும் ஏராளமான நூல்களை படைத்து கிராமத்து மக்களின் வாழ்க்கைபாட்டை நகர மக்க ளுக்கு உணர்த்த வேண்டும்” என் றும் அவர் கூறினார்.