விருதுநகர், டிச.12- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள் ளது ஆவியூர். இங்குள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தவர் வீரணன். இவர் மீது, அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச் சாட்டு புகார் அளித்தார். இதையடுத்து, அவரை காவல்துறை உயர் அதிகாரி கள் அவரை வேறு இடத் திற்கு மாற்றம் செய்தனர். இதையடுத்து 10-க்கும் மேற் பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவ லறிந்து வந்த காவல்துறை யினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்பு, மாவட்ட காவல் கண்காணிப் பாளரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அம்மனுவில் கூறப்பட்டி ருப்பதாவது: ஆவியூர் சார்பு ஆய்வா ளர் வீரணன் பொறுப்பேற்ற பின்பு, நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டப் பணிகள் துவங்கிய போது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படா மல் சுமூகமாகப் பேச்சு வார்த்தை நடத்தி ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங் குளம், கம்பிக்குடி ஆகிய கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர உறு துணையாக இருந்தார். சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுத்து நிறுத்தினார். சாலைப் போக்குவரத்தை சரி செய் தார். முக்கியமாக பெண்களி டம் தகராறு, கேலி செய்ப வர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுத்தார். பெண் களிடம் மிகவும் கண்ணிய மாக நடந்து கொள்பவர். அவரை மீண்டும், ஆவியூர் காவல் நிலைய சார்பு ஆய் வாளராக நியமிக்க வேண் டும்.