மதுரை,அக்.19- தமிழக அரசு வனத்துறை சார்பில் மதுரை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு வாரவிழா கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஓவியப் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜெயபிரகாஷ் முதல்பரிசும், அழகர் ஆறுதல் பரிசும். பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஷாஜகான் இரண்டாம் பரிசும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் பனிரெண்டாம் வகுப்பு மாண வர்கள் முகமது தய்யீப் முதல் பரிசும், நகிப்தீன் ஆறுதல் பரிசும் பெற்றனர். மாவட்ட உதவி வன அலுவலர் பரிசுகளை வழங்கினார். பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி பள்ளி உதவித் தலைமையா சிரியர் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா, ஓவிய ஆசிரியர் சண்முக சுந்தரம் மாணவர்களை பாராட்டினர்.