டிச.16 தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தேனி, டிச.14- தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின் றன. இந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு, ஐடிஐ , பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முது நிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடு நர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் டிசம்பர் 16 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இரு சக்கர வாகனங்களை திருடியவர் கைது
சிவகாசி, டிச.14- சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்களை திருடிய வரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் மாசிலா மாணி(40). இவர் தனது நண்பர் மணவாளன் என்பவரது இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தாராம். இந்நிலை யில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனம் மாயமானது. எனவே, இதுகுறித்த சிவகாசி நகர் காவல் நிலையத்தில் மாசிலாமணி புகார் அளித்தார். இதேபோல், சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன்(51).இவர் குமரேஷ்வரி என்பவ ரது இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கோவிலுக்கு சென்று திரும்பிய போது நிறுத்திய வாக னத்தை காணவில்லை. எனவே, இவரும் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், சிவகாசி அய்ய னார் காலனியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கதிரே சன் என்பவர் வாகனங்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முல்லை பெரியாறு அணை 141 அடியை எட்டியது கேரளாவிற்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி, டிச.14- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141அடியாக உயர்ந்தது .இதனைத் தொடர்ந்து தமி ழக நீர்வளத்துறை சார்பில் கேரள கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136.5அடியாக இருந் தது. இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த 3 ஆம் தேதி 140அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்பு மழையின் தீவிரம் குறைந்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையி னால் சீரான நீர்வரத்து இருந்தது. இந்நிலை யில் புதன்கிழமை காலை 6 மணிக்கு அணை யின் நீர்மட்டம் 141அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகப்பகு திக்கு 4 ராட்சத குழாய்கள் வழியே விநா டிக்கு ஆயிரத்து 600 கனஅடியும், இரைச் சல்பாலம் வழியே ஆயிரம் கனஅடி என அதிகபட்சம் 2 ஆயிரத்து 600கனஅடிநீர் திறக்க முடியும். அவசர தருணங்களில் அதிகபட்ச தண்ணீர் கேரளப்பகுதி வழி யேதான் திறக்க முடியும் என்பதால் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கேரளாவில் உள்ள வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்க ளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மாவட்டம் செய்து வருகிறது என்று தெரி வித்தனர்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி, டிச.14- மேகமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் செவ்வாயன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கூடலூர், உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. போடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவியில் சீரான தண்ணீர் வரத்து இருந்ததால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி சென்றனர். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மழையளவு பெரியாறு -3.6, தேக்கடி 2.8, கூடலூர் 3.8, சண்முகா நதி 16, உத்தமபாளையம் 4.8, போடி 19.6, வைகை அணை 1.2, வீரபாண்டி 2.4, அரண்மனை புதூர் 1, ஆண்டிபட்டி 13.2 மி.மீ மழையளவு பதிவானது.
மதுரையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை,டிச.14- மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமையன்று நடை பெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறு வனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சாத்தூர் அருகே தரிசு நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் போலீசார் விசாரணை
சாத்தூர், டிச.14- சாத்தூர் அருகே தரிசு நிலத்தில் வெட்டுக் காயங்க ளுடன் கிடந்த ஆண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உள் ளது பெருமாள்பட்டி. இங்கு ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒரு வர் பிணமாக கிடந்தார். அவ ரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அரிவாளால் வெட்டப் பட்ட காயங்கள் இருந்தன. இதுகுறித்து ஊமத்த பட்டி கிராம நிர்வாக அலு வலர் ஜெயக்குமார் சாத்தூர் தாலுகா காவல் நிலையத் தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். பின்னர், இறந்த நிலை யில் கிடந்த வாலிபரின் உடல் அருகே இருந்த பை மற்றும் சில அடி தூரத்தில் கிடந்த இரு சக்கர வாகனம் ஆகிய வற்றை கைப்பற்றி விசா ரணையை துரிதப்படுத்தி யுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை டிச-14, மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் தனியார் வங்கி இணைந்து நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர். ஜீன் ஜார்ஜ் தலைமை வகித்தார். முகாமில் 2021 - 2022 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து சென்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் பேராசிரியர் ஜோயல் எட்வின்ராஜ், பேராசிரியர்கள் கிரேஸ் ஞானதீபம், ராஜா சாலமன் கலந்துகொண்டனர்.
பன்றிகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை மாநகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர், டிச.14- தஞ்சை மாநகராட்சிப் பகுதிகளில், பன்றிகள் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் சரவண குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 8 ஆம் கோட்டத்தில் 35, 36, 40, 41 ஆகிய வார்டுகளை சேர்ந்த அன்பு நகர், பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி, விளார் ரோடு, 20 கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதி தெருக்களில் சுற்றித்திரிந்த, 18 பன்றிகளை துப்புரவு ஆய்வர் தலைமை யில் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு விளைவிக்கும் பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித் திரிந்தால், அவற்றை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது 1939 ஆம் ஆண்டு பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்’’ என கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வரி பாக்கிகளை செலுத்த வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி அறிவுறுத்தல்
பட்டுக்கோட்டை, நவ.14- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2022-2023 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை இனங்கள் மற்றும் தொழில் உரிமக்கட்ட ணம் ஆகியவற்றின் முந்தைய நிலுவைத் தொகை மற்றும் நடப்பாண்டு நிலுவை தொகை என மொத்தம் ரூ.11.02 கோடி வரி பாக்கி பொதுமக்களால் செலுத்த வேண்டியுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், தனியார் கட்டிடங்கள், அரசு அலு வலகங்கள் ஆகியவற்றிற்கு இதுவரை செலுத்தப்படா மல் உள்ள வரி பாக்கிகளை, கட்டணங்களை உடனே நிலு வையின்றி செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள், கட்டணங்கள் என ரூ.11.02 கோடி பொதுமக்க ளால் செலுத்தப்படாமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ள தால், நிதியின்மை காரணமாக நகராட்சி வளர்ச்சி பணி கள் பாதிக்கப்பட்டு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்து வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள வரி பாக்கித்தொகையை, பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் செலுத்திட வேண்டும். மேலும், வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்வதுடன் ஜப்தி மற்றும் நீதிமன்ற நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள், வணிகர்கள் அனைவரும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், கூகுள் பிளே ஸ்டோரில் Tnurban Eseva mobile app.-யை பதிவிறக்கம் செய்து தங்களை பதிந்து கொண்டு டெபிட் கார்டு / இண்டர்நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி வரி செலுத்த வும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து சனி மற்றும் ஞாயிறன்று நகராட்சி வரி வசூல் மையம் செயல்படும். மேலும், கதவு எண், முகவரி ஆகிய குறைபாடுகள் உடனுக்குடன் களையப்படும்’’ என தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார் மற்றும் நகராட்சி ஆணையர் சௌந்தர ராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நெல் பயிர் கதிர் விடும் நேரத்தில் மழை
விவசாயிகள் கவலை
விவசாயிகள் கவலை கும்பகோணம், டிச.14- நெல் பயிர் கதிர் விடும் நேரத்தில தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதி களில், விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்க ருக்கும் அதிகமாக சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள னர். சாகுபடி செய்யப்பட்டு மூன்று மாதங்க ளான நிலையில், அனைத்து பயிர்களும் கதிர்விடும் நிலையில் உள்ளன. இந்நிலையில், மாண்டஸ் புயலால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப் பாக ஞாயிறு, திங்கள், செவ்வாய் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதுமட்டுமின்றி, பனிப் பொழிவும் உள்ளது. இடைவிடாது மழை பெய்து வருவ தால், கதிர் வெளிவரும் நேரத்தில் மழை யினால் பதறாக போய் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிக மாக உள்ளதால், நெல் பயிர்களில் புகை யான் போன்ற பூச்சி தாக்குதல் ஏற்படும் என்று அச்சப்படுகின்றனர்.
வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி
திருச்சிராப்பள்ளி, டிச.14- திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதி யை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி இந்துமீனா (28). இவர் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்தார். இதனையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் தனது நண்பர்கள் வெளிநாட்டு வேலைக்கு ஆட் களை அனுப்பி வருவதாக தெரிவித்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த கிஷோர், திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேரை இந்து மீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்து, மூவ ரும் அயர்லாந்தில் பல லட்சம் சம்பளத் துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரிடம் ரூ.19 லட்சம் பெற்றனர். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் வெளிநாட்டு வேலையை பெற்றுத் தர வில்லை. அது மட்டுமல்லாமல் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இந்துமீனா திருவெறும்பூர் காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில், வினோத், கிஷோர், பிரபாகரன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். இதில், மூவரும் பாண்டிச்சேரியில் நடந்த மோசடி வழக்கில் சிக்கி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பலரையும் ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நடக்க இருப்பவை
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: இடம் :யாஃபா மஹால், கேணிக்கரை, இராமநாத புரம்,டிசம்பர் 17 மதியம் 2 மணி. பங்கேற்பு: இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான். மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்.
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவில்லிபுத்தூர், டிச.14- திருவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழ கத்தில் ஆந்திரா மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம்,கண்டுகுர் பகுதி யை சேர்ந்தவர் சரவன்குமார் சவுத்திரி(18). இவர் திரு வில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை நண்பகல் விடு திக்கு சாப்பிட வந்தவர் பின் வகுப்பிற்கு செல்லவில்லை. உடன் தங்கி இருக்கும் மாணவர்கள் மாலை வகுப்பு முடிந்து வந்து பார்த்த போது அறை பூட்டி இருந்துள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சர வணக்குமார் சவுத்திரி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவ லறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர். சமீப காலமாக பல்கலைக்கழகத்தில் விடுதியில் மாணவர் தற்கொலை தொடர்ந்து வருகிறது. இது வேதனைக்குரிய விஷயமாகும். மாவட்ட நிர்வாக மும் தமிழக அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
இராஜபாளையம் அருகே கார் மோதி பெண் பலி பொதுமக்கள் சாலை மறியல்
இராஜபாளையம், டிச.14- இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கமுனியாண்டி. இவரது மனைவி பாண்டி செல்வி (28). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். பாண்டிச்செல்வி தையல் வேலை செய்து வந்தார்.புத னன்று காலை மூத்த மகளை வீட்டருகே உள்ள பள்ளி யில் விட்டு விட்டு இளைய மகளுடன் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தென்காசியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த கார் மோதியதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். கை குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. பகுதி மக்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ராஜ பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். உயிரிழந்த பாண்டிச்செல்வியின் உறவினர்கள் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி யை சேர்ந்த சதீஷ் குமார் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
திண்டுக்கல், டிச.14- பழனி அருகேயுள்ளது வடக்கு தாதநாயக்கன் பட்டி. இந்த ஊரில் 280 ஏக்கர் நிலத்தில் பெங்களூரு வில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக விவசாய விளை நிலங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தி வரு கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சம ணர் பள்ளி உள்ள ஐவர் மலை உள்ளது. இப்பகுதி தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த வெடிமருந்து தொழிற்சாலை அமைந்தால் 10 கி.மீ சுற்றளவில் பாதிப்பு இருக்கும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் தலை மையிலான கருத்து கேட்புக் கூட்டம் வியாழனன்று நடத்தப்பட உள்ளது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் குறித்து மக்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடைபெற வேண்டும். அப்படி நடை பெற்றால் அந்த மக்களுடைய கருத்துக்கு அரசு செவி கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோருகிறார்கள். (நநி)