districts

img

தேசிய இளைஞர் விழா புதுவையில் தொடங்கியது: இணைய வழி விழாவில் பிரதமர் பங்கேற்பு

புதுச்சேரி,ஜன.12- இணையவழியாக தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 25-வது தேசிய இளைஞர் விழா  புதுச்சேரியில் 2நாள் நடைபெறுகிறது. இதன் துவக்கவிழா புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பிரதமர்  நரேந்திர மோடி இணைய வழியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி  வைத்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்சாமி, பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சி வாயம் ஆகியோர் விழாவில் பங்கேற்ற னர். அதேபோல் ஒன்றிய அரசின் இளை ஞர் விவகாரங்கள் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர்  அனுராக் சிங் தாக்கூர், சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில்துறை அமைச்சர்  பாணு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் இணைய  வழியாக பங்கேற்றனர். இவ்விழாவில் இந்தியா முழுவதும் 7,500 போர் பங்கேற்பதாக இருந்தது.  கொரோன பெருந்தொற்று காரணமாக 2நாட்களாக விழா நடைபெறும் என்று குறைத்து கொள்ளப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்பாளர்கள் அவரவர் மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையவழி மூலமே பங்கேற்ப்பார்கள் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துளளனர். காமராஜர் மணி மண்டபம் புதுச்சேரி அரசு சார்பில் கருவடிக்குப்பம் பகுதியில் ரூ.23 கோடி  செலவில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபம் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் சார் தொழில்நுட்ப  பல்கலைகழத்தையும்,  பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார். விழாவில்  மாநிலங்களவை உறுப்பினர்  செல்வகணபதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.