சேலம், நவ.4- தேசிய கல்விக்கொள்கை 2020யை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்விக்கொள்கை 2020யை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி அறிவித்த படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண் டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக் கும் வழங்க வேண்டும். 50 ஆண்டு களுக்கு மேலாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக் கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி சார்பில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செ.கணேசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ரஹீம் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட செயலாளர் நா.பெரியசாமி, உயர்நிலை, மேல்நிலைக்கல்வி ஆசி ரியர் சங்க மாநில துணைத்தலைவர் மு.மாயகிருஷ்ணன், தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் க.அப்சர் பாஷா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு காளைமாடு சிலை பகு தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார். கல்வி மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித் தார். துணைச்செயலாளர் சிவகுமார் வரவேற்றார். இந்தியப் பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிருஸ்துராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இறுதியாக டி.என்.பாளையம் வட் டார செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.