சிவகங்கை, ஜூலை 21- திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கையை ஒன் றிய அரசு திரும்ப பெற வேண்டும். தற்காலிக ஆசி ரியர் நியமனத்தை கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என் பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 11 வட்டார கல்வி அலுவலகங்கள் முன் பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிவகங்கை யில் மாநில துணைத்தலை வர் ஆரோக்கியராஜ், காளையார்கோயிலில் மாவட்ட செயலாளர் முத்துப் பாண்டியன், இளையான் குடியில் மாவட்ட துணைச் செயலாளர் அமலசேவியர், தேவகோட்டையில் மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, காரைக்குடி யில் கல்வி மாவட்ட செய லாளர் சகாயதைனேஸ், சிங் கம்புணரியில் கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கல்வி மாவட்ட செயலாளர் சிங்கராயர் , எஸ்.புதூரில் மாநில பொதுக்குழு உறுப்பி னர் ஞான அற்புதராஜ், திருப் பத்தூரில் மாநில பொது குழு உறுப்பினர் குமரேசன், திருப்புவனத்தில் கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக் குமார், கல்லலில் மாவட்ட துணைச்செயலாளர் ஜான் அந்தோணி, மானாமதுரை யில் மாவட்ட துணைத்தலை வர் ரவி ஆகியோர் பேசி னர்.