திருநெல்வேலி ,அக் .26- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை வீரமாணிக்கபுரம் மாவட்ட அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை வகித்தார். மாநில செயலா ளர் பிரமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசியதுடன் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவு களையும் விளக்கி கூறினார். மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்,
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்க ளிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக இடைநிலை ஆசிரி யர்களுக்கு வழங்கிட வேண்டும், தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆசிரி யர்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது. அதை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைக ளை வலியுறுத்தி 03.11. 2022 வியாழக் கிழமை மாலை 5 மணிக்கு திருநெல் வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டத்தை மிகவும் எழுச்சியோடு நடத்துவது, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் சிபிஎஸ் ரத்து செய்தல், புதிய கல்வி கொள்கை 2020 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5000 ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்துவது, மற்றும் நவம்பர் 26 ஆம் தேதி வாகன பிரச்சார இயக்கத்தை முன்னெ டுத்துச் செல்வது, தமிழக அரசால் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக மாணவர்க ளுக்கு வழங்கப்படும் பயிற்சி கட்ட கங்களை பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு வந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.