தேனி ,ஜூலை.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரும் சுதந்திரப் போராட்ட வீரரு மான தோழர் என்.சங்கரய்யா 101 ஆவது பிறந்தநாள் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கொடி யேற்றியும் மக்களுக்கு இனிப்பு கள் வழங்கியும் கொண்டாடப் பட்டது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கம்பத்தில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் விருதுநகர் மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. எம்.ஆர்.வி நினைவகத்தில் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் முழுவ தும் கட்சி கிளைகளின் சார்பாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப் பட்டன. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்டக்குழு அலுவ லகத்தில் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கொடியேற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜய ராஜன், எஸ். கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தோழர் மாயன் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் உரையாற்றினார்.
தீக்கதிர்
மதுரை தீக்கதிர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்தி ரன், இடைக்கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.