districts

img

பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

விருதுநகர்,மே 20- பட்டாசு தொழிற்சாலைகளில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து மொத்தம் ரூ.12.50 லட்சம் நிவாரண  உதவித்தொகைகளை மே 19 அன்று  விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வருவாய் -பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  வழங்கினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே  ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனி யாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற் சாலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில்  குமரே சன்,சுந்தர்ராஜ்  மற்றும் அய்யம்மாள்  ஆகிய  மூன்று பேர் உயிரிழந்தனர். இருளாயி என்ப வர் காயமடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருளாயி என்பவருக்கு ஐம்பதாயி ரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டா லின் உத்திரவிட்டார். இதே போல்,வெம்பக்கோட்டை வட்டம், பனையபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு  சில்லரை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட   வெடிவிபத்தில் உயிரிழந்த வெம்பக் கோட்டையைச். சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் குடும்பத்திற்கு  ரூ.3 இலட்சம்  நிவாரணத்தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டிருநதார். முதல்வர் ஸ்டாலின்உத்தரவுப்படி  இந்த  இரு வேறு வெடிவிபத்துகளில் உயிரிழந்த  4 நபர்களின் குடும்பங்கள் மற்றும்  காயம டைந்தவருக்கு என மொத்தம் 5 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து ரூ.12.50 இலட்சம் நிவாரண நிதி உதவியினை வருவாய் -பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  வழங்கினார்.