மதுரை, ஆக.27- மதுரை தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரி யர் கழகம் சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு இலவச ஆம்பு லன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி மூட்டா அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பேரா.ஜி.ராம மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் பேரா.பெரிய தம்பி துவக்கி வைத்தார். பேரா.கே.வி.ஆனந்தன் வர வேற்றார். மூட்டா தலை வர் பேரா.ஏ.டி.செந்தாம ரைக்கண்ணன், ஜிசிடிஏ பொதுச் செயலாளர் பேரா.சுரேஷ், ஒருங்கிணைந்த உயர்கல்வி பாதுகாப்பு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் பேரா.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இலவச ஆம்புலன்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஏ.ரத்தி னவேலிடம் வழங்கினார்.