நாகர்கோவில், ஜுன் 29- திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாத வகையில் அவர்க ளுக்கு தேவையான அடிப்படை வசதி களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரி வித்தார். கன்னியாகுமர் மாவட்டம் திருவட்டாறில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் திருக்கோ யில் மகா கும்பாபிஷேகம் ஜுலை 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி செவ்வாயன்று (ஜுன் 28) கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோ யில் பக்தர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை, திருவட்டார் பேரூ ராட்சி மற்றும் திருக்கோயில் பக்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள். உள்ளாட்சித்துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஒருங் கிணைத்து திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாத வகையில் அவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளான சாலை சீரமைப்புப்பணி, தெருவிளக்கு, குடிநீர் வசதி, பயோ கழிப்பறை, சிறப்பு பேருந்து வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
மகா கும்பாபிஷே கத்தினை அனைவரும் பார்க்க வேண்டு மென்ற காரணத்தினால் ஆலயத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 10 எல்இடி திரைகள் பொருத்தப்படும். புனித நீர் எடுப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் பிரமுகர்கள், காவல் துறை யினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட யாராலும் கோயிலில் கடைபிடிக்கப்படு கின்ற வழிபாட்டு முறைகள், நம்பிக்கை முறைகளிலும் எவ்வித இடையூறும் ஏற்படாது. இதுகுறித்து ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இக்கலந்தாய்வில், பூரம் திருநாள் மன்னர் வாரிசு லெட்சுமிபாய், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பிரனிலா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.