districts

img

சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரகாஷ் காரத் பிரச்சாரம்

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஏப்ரல் 6 சனிக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மதுரை மாநகரிலும், யா.ஒத்தக்கடையிலும் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.  

மதுரை வடக்கு மாசி - மேல மாசி வீதி சந்திப்பில் மத்திய பகுதிக்குழு - 2 செயலாளர் பி.ஜீவா தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் வரவேற்று பேசினார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வ.வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, விசிக மாவட்டச் செயலாளர் பா.ரவிக்குமார், சிபிஐ மத்திய தொகுதி பொறுப்பாளர் நந்தாசிங், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.முனியசாமி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.கோபிநாத் நன்றி கூறினார். ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரகாஷ் காரத் உரையை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார்.