தேச விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் எதிர்புறம் அமைந்துள்ள முக்கோண பூங்கா அருகில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கிராமிய கலைஞர்களின் களரி வீர விளையாட்டு நடைபெற்றது. ஏரானமான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.