வாலிபர் சாவில் மர்மம்? தேனி அருகே மறியல்
தேனி, நவ.7- வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி தேனி அருகே குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் வடக்குத் தெருவில் வசித்து வரும் பால்பாண்டி என்பவரின் இளைய மகன் அய்யணன்(18). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அறிவானந்தம் என்பவரது தோட்டத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 1-ஆம் தேதி விவ சாயத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றிருந்தார். அங்கு மின்சார வயர்கள் சுருண்டு கிடந்ததை சரி செய்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அய்யணனை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்த னர். இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி க.விலக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அய்யணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் அளித்து இருந்தார். சாலை மறியல் இந்தப் புகாரில் ஏந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அய்யணனின் உறவினர்கள் நூற்றுக்கணக்கா னோர் குன்னூர் பகுதியில் மதுரை -தேனி தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தும் ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராம லிங்கம் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிறுத்தை தாக்கி கடமான் பலி
தேனி, நவ.7- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் கிரிவலப் பாதையுடன் மலை மேல் அமைந் துள்ளது கைலாசநாதர் கோவில். இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் கிரிவலப் பாதை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் கடமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட பக்தர்கள் தேனி வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரி கள் இறந்து கிடந்த கடமான ஆய்வு செய்தபோது சிறுத்தை தாக்கியதால் கடமான் இறந்திருக்க கூடும் என தெரிவிக் கின்றனர்.
நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி
நத்தம், நவ.7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொரசின்னம் பட்டியை சேர்ந்தவர் செல்லையா (48). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று மலை அடிவார பகுதி யில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் ஆட்டுக்குட்டி களை கட்டி வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது 9 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறைக்கும், கால் நடைத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்
பழனி, நவ.7- பழனி பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பழனி எல்ஐசி ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் தலைமை வகித்தார். தமிழ் துறைத் தலைவர் முனைவர் வாசுகி வர வேற்றார். பழனி எல்ஐசி கிளை ஊழியர் சங்க நிர்வாகி கள் திருமலைசாமி, தியாகராஜன், ஊழியர் இராம மூர்த்தி ஆகியோர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு பகுதியில் வாழையை தாக்கும் நோய்கள் விவசாயிகள் கவலை
சின்னாளப்பட்டி, நவ.7- வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பகுதி யில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாட்டு வாழை, கற்பூரவல்லி போன்ற பலவகை வாழை விவசாயம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், வாழையில் வெடிப்பு மற்றும் குருத்துப் பூச்சி நோய் ஏற்பட்டு வாழை வாடுகின்றது. குருத்து பூச்சி நோய் ஏற்பட்டுள்ள வாழை மர இலைகளில் சிறு, சிறு ஓட்டைகள் விழுந்து உள்ளன. விவசாயிகள் அதற்காக உரிய மருந்துகளை வாங்கி வாழையில் தெளித்து வரு கின்றனர். எனவே வேளாண் அதிகாரிகள் நேரடியாக வந்து உரிய மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கேட்டறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
விருதுநகர், நவ.7- விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பெற்றார். பின்பு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறு தல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றுக் கொண்டதோடு, உடனடியாக நட வடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பொது விநியோக திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை களை வழங்கினார். மேலும் இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. ரவிகுமார், நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துகழுவன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்
தேனி, நவ.7- போடி அருகே அணைக்கரைப்பட்டி யில் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி செயல்பாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இயக்கிவைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற் றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகீர் மான கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி துணை மின் நிலை யத்தில் செயல்படும் மின்மாற்றியை 10 எம்விகே-லிருந்து 16 எம்.விகே-க்கு தரம் உயர்த்தி மின்மாற்றியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் துணை மின்நிலையத்தை பார்வையிட்டார். வத்தலக்குண்டு துணை மின் நிலை யத்தில் ரூ.1.60 கோடி திட்ட மதிப்பீட்டில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை தலை மைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் மின்மாற்றியை திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் இயக்கி வைத்தார் மதுரை மதுரை எல்லிஸ் நகர், துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், மாநக ராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர் மின் மாற்றிகளைப் பார்வையிட்டனர்.
விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
விருதுநகர், நவ.7- விருதுநகர் புறநகர் பகுதிகளான அகமது நகர், பரங்கி நாதபுரம், ஆயம்மாள் நகர், மேற்கு, கிழக்கு பாண்டி யன் காலனி, இந்திரா நகர், லட்சுமி நகர், பத்தனாட்சி நகர், பராசக்தி காலனி, புல்லலக்கோட்டை சாலை, நேருஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மின்பாதை பராமரிப்புப் பணிகள் நவம்பர் 9-ல் நடைபெறவுள்ளது. எனவே, அப்பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்
நத்தம், நவ.7- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. நிலைய அலுவலர் திருக்கோள்நாதர் தலைமை யில் 10 பேர் கொண்ட குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியர் ஜேசு தாசன் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரிய, ஆசிரியை கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்
திண்டுக்கல், நவ.7- சிறுதானிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறு தானிய பயிர்கள் சாகுபடி மற்றும் அதன் தொழில்நுட்பங் கள் குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திங்களன்று உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரச்சார இயக்கத்தை திண்டுக்கல் ஆட்சியர் முனைவர் விசா கன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கருங்காலக்குடி புதிய சுகாதார மையத்திற்கு தண்ணீர் வசதி கோரி வாலிபர் சங்கம் மனு
சிவகங்கை, நவ.7- கருங்காலக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார மையத்திற்கு தண்ணீர் வசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையா ளரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவினை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் ராஜா, மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் இன்னாசி ராஜா ஆகியோர் அளித்தனர். மேலும் கருங்காலக்குடியிலிருந்து ஒக்கூர் வரைக்கும் உள்ள சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், வன்னிமுத்து, அருண்குமார், ரஞ்சித் குமார், தினேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் பலி செவிலியர் கைது; மருத்துவர் மீது விசாரணை
இராஜபாளையம், நவ.7- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப் பட்டியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ் என்ப வர் அருகில் உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது மகன் கவிதேவநாதன் (5) காய்ச்சலுக்காக கடந்த வியாழனன்று ஊசி போட்டுள்ளார். ஆனால், மூன்று நாட்களாகியும் காய்ச்சல் குறையாத நிலையில், சம்பந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை யில் ஊசி போட்டுள்ளனர். ஊசி போட்டு வீட்டுக்கு வந்து சில மணி நேரங்களில் சிறுவன் சோர்வாகவும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் காணப்பட்டுள்ளான். உடனே உறவினர்கள் இராஜபாளையம் மருத்துவ மனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து திங்களன்று விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் இராஜபாளையம் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிவகாசி சுகாதார துணை இயக்குநர் கலுசிவலிங்கம் மற்றும் இராஜபாளையம் நகர் நல அலு வலர் மருத்துவர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட அக்மேஸிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்கு அறிக்கையை சமர்ப்பித் தார். இதன் அடிப்படையில் செவிலியரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
சமயபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் சேற்றில் நாற்று நடும் போராட்டம்
இராஜபாளையம், நவ.7- இராஜபாளையம் அருகே சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்து தராத சமயபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண் டித்து பொதுமக்கள் சேற்றில் நாற்று நட்டும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் அருகே உள்ள சமயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கிழவன் கோயில் கிராமத்தில் 220 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி னர். இதுகுறித்து பலமுறை சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் 30 க்கும் மேற்பட்டோர் திங்களன்று அப்பகுதியில் தேங்கியிருந்த சகதியில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு 20 வரு டங்களாக தங்கள் பகுதியில் நிலவி வரும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கிழவன் கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.