districts

img

4.20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: தேனி ஆட்சியர் தகவல்

தேனி, ஜன.4- தேனியில் 4.20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தெரிவித்துள்ளார். தேனி வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டைதாரர களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப் பினை மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சர வணக்குமார் முன்னிலையில் வழங்கி, தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை யின் கீழ் செயல்பட்டு வரும் 401 முழுநேர நியாய விலைக்கடை கள், 88 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் 28 மக ளிர் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 517 நியாயவிலைக் கடைகளின் மூலம் 5 வட்டங்களில் மொத்தம் 4,20,897 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் டோக்கன்கள் வழங் கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வின்போது, கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதி வாளர் து.ஆரோக்கியசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மு. சாந்தி உட்பட பலர் கலந்து கொண் டனர்.